Friday, November 27, 2009

ராஜகுமாரனின் ம(ண்)குடம்.

மாதவராஜின் பிளாக்கை நியாயத்துக்கு அப்பாற்பட்ட தாமதத்துடன் முந்தாநாள் படித்தேன்.mathavaraj.blogspot.com. அதில் அவரது முதலாவது (செம்மலர்)சிறுகதையான மண்குடம்- கதையை இட்டிருந்தார்.

அவரது சிறுகதைத் தொகுப்பு ‘ராஜ குமாரன்’ என்றே என் ஞாபகம். மண்குடத்தை விட நல்ல கதைகள் உள்ள அந்தத் தொகுப்பைக்கொண்டு இந்த மாதவராஜ குமாரன் அறியப்பட்டிருக்கலாம். ஆனால், தமிழின் மோனை மோகத்தால் ’மண் குடம் மாதவராஜ்’ என இலக்கியர் பலரால் அறியப்பட்டார்.

நினைவில் மறந்திருந்த மண் குடத்தை மறுபடி படித்தேன். தமிழின் முதாலம் சிறுகதையைப் போன்றதான உத்தியில் மண் குடமே இக்கதையைச் சொல்கிறது.வாயும் வாப்பாடும் உள்ள அந்த வஸ்து கதையில் பேசுவதில் வியப்பில்லை. விக்கிரமாதித்தன் கதைகளில் திரைச்சீலை,தாவணி, புடவை முதலியவை பேசவில்லையா என்ன?

சாதாரண ஆரம்பமாகத் தொடங்குகிற அந்தக்கதை பொதுவாக அல்லது பார்வைக்குத் தெரியும் மேலோட்டத்தளத்தில் தண்ணீர்ப்பஞ்சத்தைப் பேசுகிறது. செண்பகம் தண்ணிக்குப் படுகிற பாட்டைப் பார்த்துவிட்டு ‘தனக்கொரு இறக்கை முளைத்தால் பரவாயில்லை. பறந்து போய் தண்ணீர் கொண்டுவந்து தாகந் தீர்க்கலாம்’ என நினைக்கிற இடத்தில் கதைக்கு நிஜமாகவே இறக்கை முளைக்கிறது.

கடைசியில் நீர்வேண்டிய போராட்டத்தில் குடம் உடைபடும்போது செண்பகத்தைப்பார்த்து கத்த நினைக்கிறது.ஆறு என்கிட்ட எவ்வளவோ சொல்லியிருக்கு.,என்று முடிகிற கதைக்கு முந்தைய இருவரிகள்... அதை எடுத்துவிட்டால் கதை இன்னும் கச்சிதம் பெற்றிருக்கும்.

23ஆண்டுகளுக்கு முன்பு எழுதின கதை என்கிறார் மாதவராஜ்.அப்ப அது அப்படித்தான் இருக்கும். இப்போது எழுதியிருந்தால் தேவையில்லை என நான் நினைத்த கடைசிக்கு முந்தைய இருவரிகளை எழுதியிருக்க மாட்டார்.உங்கள் கண்ணோடு ஒன்று சொல்கிறேன். அந்தக் கதையையே எழுதியிருக்க மாட்டார். இப்பதான் மண்குடம் இல்லியே.

ஆனால் உள்ளே ததும்பும் ஆன்மா இருக்கிறதே அலையடித்துக்கொண்டு.

2 comments:

Nathanjagk said...

நல்ல அறிமுகம்! கூட​வே மாதவராஜின் வலைமுகவரியும் ​சேர்த்துக் ​கொடுத்து, கூடிவரும் நிபுணத்துவ​த்​தை தட்டச்சி விட்டீர்கள்!

நேசமித்ரன் said...

//ஆனால் உள்ளே ததும்பும் ஆன்மா இருக்கிறதே அலையடித்துக்கொண்டு. //

அது ....!