Tuesday, March 9, 2010

மார்ச் எட்டு - உலக...

மார்ச் எட்டாம் தேதியை உலக பெண்கள் தினமாக அறிவித்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்கு எந்தப் புண்ணியவானோ புண்னிய வதியோ காரணமாயிருக்கலாம். அவர்களைப் போற்றலாம். ஒருவேளை ஏற்பாடு செய்தவர்கள் பாவியாய் இருந்தால் இந்த ‘பாவி’ என்பது ஆண்பால் பெண்பால் இரண்டுக்கும் பொருந்தும்.
தமிழில் ஏன் பலர் இந்த நாளை உலக மகளிர் தினம் என அழைக்கிறார்கள் எனத் தெரியவில்லை. இந்த மகளிர் என்ற சொல் எந்த கிழவியையும் ஒரு மங்கை நிலையைத் தாண்டாத மன உணர்வு நிலையில் வைத்திருப்பதுடன் பெண்ணின் பல நிலைகளையும் வீச்சுகளையும் மறுக்கிறது. நம் தமிழ்ப் பொது மனதின் மாறாத மந்த புத்திக்கு உதாரணம்.
மகளிர் தினத்தை மாற்றிச் சொல்லுமாறும் மேற்படி நாளில் பெண்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி காதலைத் தெரிவிக்கவேண்டாம் என ஆண் நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன்.
பெண் நண்பர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வதுடன் ஆணும் பெண்ணும் நட்பாயிருப்பது பற்றி யோசிக்கிறேன். தசை மற்றும் இச்சையுடன் செயல்படும் சில நேரங்களில் உடலிலியாய் ஏன் நாம் தோன்றியிருக்கக் கூடாது எனவும் ஏங்குகிறேன்.

No comments: