Thursday, April 29, 2010

எதிர்ச்சேவை

வருடம் தவறாமல்
கல்யாணம் மீனாளுக்கு
என்றாலும்
சமயத்தில் வந்து சேர
வாய்க்காது சகோதரனுக்கு
எப்போதும்.

சூடிக்கொடுத்த மலர்களால்
சுகங்கண்ட சோம்பேறி அவன்.
மண மங்கல ஒலி கேட்டு
சீதனம் நதிலெறிந்து
திரும்புவான் அவன்.
அழகன் கண்ணீர் ஆற்றோடு போகும்.

மீளும் அவனுக்காக
வண்டியூரில் காத்திருப்பாள்
இன்னுமொரு அடியாள்.
‘துளுக்க நாச்சியம்மை.’*

*-சித்ரா பவுர்ணமியின் நேற்றைய நினைவுகளோடு இது பதியப்பெறுகிறது. பண்டு ஒரு காலம் இதை வெளியிட்ட தினமணி - கதிருக்கு நன்றி.

2 comments:

VELU.G said...

கவிதை அருமை

இளமுருகன் said...

நன்று,ரசித்தேன்