Thursday, June 3, 2010

நட்பினை யோசித்தல்...

நட்பு பற்றி ,நட்பின் சுகம் (அ-(காதலின் சுகம்) பற்றி யோசிக்கும் போதெல்லாம் என் நண்பன் ஒருவன் அவனது கல்லூரி முதலாமாண்டுக் காலத்தில் சமவயது மாணவியுடன் நிகழ்த்திக்கொண்ட பரிவர்த்தனை நினைவுக்கு வருகிறது.எண்பத்தைந்தாம் வருடங்களில் அவர்களுக்கு இடையே நடந்துகொண்ட எழுத்துரையாடலைக் காணும் போது இப்போதும் எனக்கு வியப்பு மேலிடுகிறது. அப்புறம் அவர்கள் பிரிந்தார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். காதலினும் பெரிது உலகு.

நண்பன் ஒரு ஊடல் சமயத்து காதலிக்கு எழுதிய கடிதம் இப்படி:

மறந்து விடுவதை விட எப்படியும் தண்டித்துவிட முடியாது. தண்டித்துவிடாமல் எதுவும் செய்க.

பெண்ணின் பதில் : ‘நீ என் சுவாசம்.”
(சுவாசத்தை நினைவு வைத்துக்கொண்டிருப்பதில்லை என்பது உட்கிடை)

நண்பன் பதில் : ‘நான் உன் குளத்து மீன் மறுபடியும் தூண்டில் போடாதே.’

ஆக இவ்வாறாயிருந்தன காரியங்கள்.இருக்கின்றனவும் கூட காரியங்கள். நட்பின் களிபேருவகையும் இணையொரு வகையும் நானறிய வேறில்லை என்றபோதும் நரம்பும் ஆன்மாவும் தளர்வுற்றிருக்கிற சமயங்களில் எது ஒன்றும் பொருட்படத் தக்கதாகக் காணாமல் சாவின் நலிவை முத்தமிட முனைகிறேன்.

மற்றபடிக்கு நூறாம் பதிவின் பின்னூட்டமிட்டுக் கிளர்த்தி மலர்த்திய ஆதிரனுக்கு இதில் வரும் பெண்ணின் பதில் எப்போதும் உண்டு. ஆதிரனைப் படிக்கையில் நான் என்னளவில் தத்துவ விசாரணையைத் தனி விசாரணையாகக் குறுக்குவதை உணர்கிறேன்.

5 comments:

adhiran said...

thanks siva.

க ரா said...

காதலினும் பெரிது உலகு :-).

பத்மா said...

இருவருக்கும் வாழ்த்துக்கள் .மகிழ்ச்சியாய் இருக்கு படிக்க

நேசமித்ரன் said...

கலக்குங்க!

Nathanjagk said...

இங்கேயும் சொல்கிறேன்...
இன்னும் நூறாம் பதிவு வரலே.