Sunday, August 15, 2010

பிராது..

ஒரு விமானத்துக்கு இரண்டு இயக்குனர்கள் இருந்தார்கள். இவர்களை ஓட்டுநர் என்று சொல்வதா பறக்குனர் என்று சொல்வதா என்பது புரியாததாலேயே இப்படி சொல்கிறேன். சரி... பைலட்டுகள்.

இந்த பைலட்டுகள் தங்கள் குறைகளை எழுதி மேலிடத்துக்கு தெரிவிக்க ஒரு நோட்டு இருந்தது. அது வெகு நாட்கள் இவர்களின் உபயோகிப்பு இன்றியே இருந்தது. இருவரில் ஒருவருக்கு குடிப்பழக்கம் உண்டு. அதாவது தினமும் குடித்துவிட்டுத்தான் விமானத்துக்கே வருவார். மற்றவருக்கு அந்த ஜோலி
கிடையாது.

குடிக்காதவர் ஒருநாள் அந்த நோட்டில் எழுதிவைத்துவிட்டார்.’ சக விமானி இன்று குடித்துவிட்டு விமானம் இயக்கினார் ’என்று. இது மேலிடத்துக்குப் போகுமுன் அதைப் பார்த்துவிட்ட சக விமானி உடனடியாக தன் தரப்புக்கு ஒரு குறிப்பு எழுதிவைத்தார்.

‘இன்று என் சக விமானி குடிக்காமல் விமானம் ஓட்டினார்.’

(எழுத்தாளர் எஸ். லட்சுமணப்பெருமாள் வாயிலாக ஒலி பெருக்கியில் கேட்டது இது)