Friday, August 27, 2010

வெண்ணிலாவின் குறும்பு...

ஒரு ஊர்ல ஒரு வெண்ணிலான்னு ஒரு பாப்பா இருக்குமா... அப்ப ஒரு அழகான பட்டர்ஃபிளை இருக்குமா வண்ணத்துப்பூச்சி. அதுக்கு ஒரு குட்டி பிறந்துச்சாம். அப்ப அது அதுக்கு நெறயா தேன் குடுக்குமா. அந்த வெண்ணிலா பாப்பா அவங்க அப்பாகிட்டக் கேட்டுச்சாம், “ அப்பா... அப்பா... இந்த பட்டர்ஃபிளை நம்ம கூட  வராதான்னு கேட்டுச்சாம். அவங்கப்பா சொன்னாரா , “பட்டர் ஃபிளையை நம்ம கூப்புட்டா வரும்”னு சொன்னாராம். அதுக்கு அந்த வெண்ணிலா சொல்லுச்சாம்.

“ இப்ப கூப்டா வருமான்னு “ கேட்டுச்சாம். அதுக்கு அவங்க அம்மா உள்ளருந்து வந்து அவங்க சொன்னாங்களாம் , “ பட்டர் ஃபிளை இன்னேரம் தூங்கீருக்கும்’’ னு சொன்னாங்களாம். வெண்ணிலாப் பாப்பா சொல்லுச்சாம்.

“ நா மட்டும் முழிச்சிருக்கேனேன்னு”  கேட்டுச்சாம்.

“நீ பெரிய புள்ள. ஆனா ,பட்டர் ஃபிளைலாம் ... சின்ன மிருகந்தான் ம்ஹூம் சின்ன பறவைதான்.அதுனால அது சீக்கிரமாவே தூங்கிரும்.”

(அப்பா கதையோட மாரல் எழுதலாமா? - கதையோட மாரல் தான் இப்போ... என்னப்பா இதெல்லாம் போயி அடிச்சுக்கிட்டு இருக்கீங்க)

நீங்களும் சீக்கிரமா தூங்கினீங்கன்னா காலைல ஸ்கூலுக்கு வேகமா போயி மேம்ட்ட அடிவாங்காம இருக்கலாம். அவ்வளவுதான்....

* குட்டி ரேவதியின் குறுங்கதை, ‘ நிலவில் குடியேறிய மரத்து அணில் ’படித்துவிட்டு ஸ்வேதா குட்டி சொன்ன கதை.தலைப்பும் ஸ்வேதாவே...தட்டச்சாக்கம் - சிவகுமார்

No comments: