Monday, December 13, 2010

துக்க வலி

நெரிக்கும் வலிக்குப்
பிந்தைய காலை அயர்வில்
 வந்துற்ற கனவில்
பால்ய காலத் தோழி வந்தாள்.
ஒரே படுக்கையில் இருந்தாள்.
தீண்டல்களுக்குப் பிந்திய
என் நச்சரிப்பில் இசைந்து
வாகுதந்து படுத்தவளின்
பாலுறுப்புகள் இடம் மாறி
இருந்தன.

பிசைதலின் வெறியில் நான்
பிரக்ஞையுடன் செயல்பட்டபோது
ஆறெனப் பெருகி வழியும்
அவளது மூத்திரம் படுக்கைத்
திண்ணையை முற்றாக நனைக்கிறது.

இருவருக்கும் பொதுவான ஒரு
அக்கா வந்து சத்தம் போடுகிறாள்.
கனவு கலைந்தபின் கனவு
பற்றி எழுகிறது குற்றவுணர்வும்
அறவுணர்வும்.

நரகத்தின் சுவர்களுக்கு கற்கள்
சேகரமாகின்றன. உட்புறம்
வெளிப்புறம்
எங்கிருந்து கட்ட ஆரம்பித்தாலும்
அது அத்தனை ஒன்றும்
நல்லதுக்கல்ல...