Saturday, December 25, 2010

அதி

உங்களோடு நான் இப்போது
நினைவிற்கு வரவில்லையெனில்
கதவுகளைச் சாத்துங்கள்!
கதவுக்குப் பதிலாக கதவுகள்
இருக்கும்படி உங்களை நான்
ஆசீர்வதிக்கிறேன்.

நேற்று மெய் தவிர்த்த இருப்பில்
எல்லாமும் நடந்ததாகக் கனவு
கண்டதெங்ங்னம்?

போயே போயின போயினவே
..........
தவிர்த்தல் குறித்து
மனமோ இவ்விதமுரையாடினால்
போவது எவ்விடமோ?

உரைத்துத் தீராதது
யாரிடம் பகிரவென
தன்னில் விழித்த இமைக்கணப் பொழுது
நெட்டுயிர்த்துப்
பெரிது தவித்து
எல்லா இடமும் இடுமொரு
ஓலம்
யாவருக்கும் அழிக்க உரிமையுள்ள
ஒரு கோலம்.

No comments: