Wednesday, April 6, 2011

வாக்காளர்களுக்கு...

தேர்தல் கமிஷனால் கைப்பற்றப்படும் பணத்தின் அளவு மலைக்கவைப்பதாய் இருக்கிறது. அதிலும் இன்றைய செய்தியான , ‘திருச்சி;ஆம்னி பஸ்ஸில் அஞ்சு கோடி’ மகத்தான செய்திதான். ஆம்புலன்சு முதல் ஆம்னி பஸ் வரை என ஏற்கெனவே பேரிட்டும் ஆகிவிட்டது. இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு அம்மி கொத்துகிறவர் பூட்டு குடை ரிப்பேர்காரர்கள் வரை குடைந்து எடுப்பார்கள் என நம்புவோம். வாக்காளர்களிடம் வேட்பாளர்களும் காலில் விழத் தொடங்கிவிட்டார்கள். நல்லது ஆற்றப் போகிறவர்கள் அத்தனை பாடுபட்டு அந்த வாய்ப்பை வாங்காவிட்டால்தான் என்ன கெட்டுப்போகும் என்று தெரியவில்லை.

இந்நிலையில் நேற்று சென்னையில் ‘பணம் வாங்காதீர்கள், கட்டாயம் வாக்களியுங்கள்’ என கலெக்டர் அமுதா முன்னிலையில் கல்லூரி மாணாக்கர்/கியர்கள் பொதுமக்களின் காலில் விழுந்து வேண்டிக்கொண்ட நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டு என்ன விதமான உணர்ச்சியை அடைவது எனத் தெரியாமல் பேதலித்துவிட்டேன்.

’முள்ளை முள்ளால் எடுப்பது’ என்பது இதுதானோ?

No comments: